ஆப்நகரம்

பிரிட்ஜோ உடலை வாங்க மறுத்து 3வது நாளாக போராட்டம்

பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் மீனவர்கள் தொடர்ந்து 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

TNN 9 Mar 2017, 4:26 pm
பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் மீனவர்கள் தொடர்ந்து 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil protest continues 3rd day rameswaram against srilankan navy attack
பிரிட்ஜோ உடலை வாங்க மறுத்து 3வது நாளாக போராட்டம்


கடந்த திங்கள்கிழமை ராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆதம்பாலம் அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த பிரிட்ஜோ (22) இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ராமேஸ்வரம் அரசு மருத்துமனையில் நடந்த பிரேத பரிசோதனையில் பிரிட்ஜோவில் உடலில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிக்குண்டு அகற்றப்பட்டது. இதனையடுத்து மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேரில் வரும் வரை பிரிட்ஜோவின் உடலை வாங்கப்போவதில்லை எனக்கூறி உறவினர்களும், பொதுமக்களும் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மேலும் அரசு அறிவித்துள்ள ரூ.5 லட்ச நிவாரணத் தொகையையும் வாங்க மறுத்து விட்டனர்.

சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி மூன்றாவது நாளாக தங்கச்சி மடத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி