ஆப்நகரம்

காவிரிக்காக கல்லணையில் விவசாயிகள் போராட்டம்: சீமான், பாரதிராஜா பங்கேற்பு!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கல்லணையில் இன்று விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பங்கேற்றனர்.

Samayam Tamil 27 Apr 2018, 6:00 pm
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கல்லணையில் இன்று விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பங்கேற்றனர்.
Samayam Tamil protest for cauvery water management board in kallanai seeman and bharathiraja
காவிரிக்காக கல்லணையில் விவசாயிகள் போராட்டம்: சீமான், பாரதிராஜா பங்கேற்பு!!


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் வலியுறுத்தியும் இதுவரை , மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. உச்சநிதிமன்றம்அறிவுறுத்திய ஸ்கீம் என்பதற்கான விளக்கம் கேட்டு மத்திய அரசு மனுதாக்கல் செய்தது.

இதற்குஉச்சநீதிமன்றம் ‘ஸ்கீம்’ என்றால் காவிரி பிரச்சனையை தீர்க்கும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்என்று மத்திய அரசுக்கு விளக்கம் அளித்தது. மேலும், மே 3 ஆம் தேதி வரைவு திட்டம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.இந்த நிலையில், வரைவு திட்டம் தாக்கல் செய்ய மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் கோரி இன்று மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில்காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கல்லணையில் விவசாயிகள் போரட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று நடந்த போராட்டத்தில் விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையினர் கலந்து கொண்டனர்.தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் இயக்குநர் பாரதிராஜா, சீமான் ஆகியோர் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

அடுத்த செய்தி