நாகை: காவிரி நீரை பெற்றுத்தர வலியுறுத்தி வரும் 19ம் தேதி நாகை, திருவாரூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
நாகையில் காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், மேட்டூர் அணையிலிருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி இல்லாமல் போய் விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த பிரச்னையில் அனைத்து கட்சிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை தமிழக அரசு அழைத்து பேசவில்லை என்றும், கர்நாடக மாநில முதல்வரை வற்புறுத்த எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டனர். இந்த ஆண்டும் சம்பா சாகுபடிக்கு உரிய காலத்தில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கப்படுவதுடன் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தர வேண்டிய எஞ்சிய 70 டிஎம்சி தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும் காவிரி நீர் மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்டத்தில் வரும் 19ம் தேதி சாலை மறியல், கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தனர். இதேபோல் திருவாரூரிலும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதற்கு அனைத்து தரப்பினரும் தங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
நாகையில் காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், மேட்டூர் அணையிலிருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி இல்லாமல் போய் விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த பிரச்னையில் அனைத்து கட்சிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை தமிழக அரசு அழைத்து பேசவில்லை என்றும், கர்நாடக மாநில முதல்வரை வற்புறுத்த எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டனர். இந்த ஆண்டும் சம்பா சாகுபடிக்கு உரிய காலத்தில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கப்படுவதுடன் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தர வேண்டிய எஞ்சிய 70 டிஎம்சி தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும் காவிரி நீர் மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்டத்தில் வரும் 19ம் தேதி சாலை மறியல், கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தனர். இதேபோல் திருவாரூரிலும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதற்கு அனைத்து தரப்பினரும் தங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.