ஆப்நகரம்

தடையை மீறிய மு.க.ஸ்டாலின்; வள்ளுவர் கோட்டத்தில் பரபரப்பு அறிவிப்பு!

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 18 Dec 2020, 10:19 am
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று (டிசம்பர் 18) 23வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது. அதேபோல் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று விவசாயிகளும் அறிவித்துள்ளனர். இதனால் தலைநகர் டெல்லி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் போராட்டக் களமாக நீடிக்கிறது.
Samayam Tamil MK Stalin


இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, கனிமொழி, திருமாவளவன், திருநாவுக்கரசர், வேல்முருகன், வைகோ, ரவி பச்சமுத்து, பாரிவேந்தர், முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

செம்மரம் வெட்டும் விவகாரம்; தமிழர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி!

முன்னதாக 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், தடையை மீறி எதிர்க்கட்சிகள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று சேர்ந்துள்ளன. அங்கு அனைவரும் பச்சை நிற முகக்கவசம் அணிந்து காணப்பட்டனர்.

அதில் ”விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களை திரும்பப் பெறு” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், விவசாயிகள் நலன் பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது.

ஜீவ சமாதி பூஜை! உயிருடன் திரும்புவாரா பார்வதி? - செம்பருத்தி சீரியல் அப்டேட்

போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என மத்திய அரசு முத்திரை குத்துகிறது. வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் தேவையில்லை. அதனை முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி