ஆப்நகரம்

ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடும் வரை போராட்டம்: 80 கிராம மக்கள் தீர்மானம்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்தியஅரசு கைவிடும்வரை போரட்டம் தொடரும் என்று 80 கிராம மக்கள் தீர்மானம் இயற்றியுள்ளனர்.

TNN 27 Feb 2017, 3:57 pm
புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்தியஅரசு கைவிடும்வரை போரட்டம் தொடரும் என்று 80 கிராம மக்கள் தீர்மானம் இயற்றியுள்ளனர்.
Samayam Tamil protest will continue up to drop the hydro carbon project
ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடும் வரை போராட்டம்: 80 கிராம மக்கள் தீர்மானம்


புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அந்த திட்டம் மூலம் கிராமங்கள் முற்றிலும் அழிந்து, தமிழகமே பாதிக்கப்படும் என்று குற்றம்சாட்டுகின்றனர்.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நெடுவாசலில் நடைபெற்றது. அதில் 80 கிராம மக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். நெடுவாசலை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து பேரவையில் தீர்மானம் தேவை என்று கூறியுள்ளனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை, அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். மேலும் வீடுகளில் அகல்விளக்கு ஏற்றும் போராட்டம் நடைபெறும் என்று குறிப்பிட்டனர்.

Protest will continue up to drop the Hydro Carbon Project.

அடுத்த செய்தி