ஆப்நகரம்

தமுக்கம் மைதானத்தில் போராட்டம் வாபஸ்!

ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டம், நடத்திய மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுவதாக அறிவித்தனர். ஆனால் ஒரு குழுவினர் வாபஸ் இல்லை என தெரிவித்துள்ளதால், அங்கு குழப்பம் நிலவுகிறது.

TOI Contributor 23 Jan 2017, 5:05 pm
மதுரை: ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டம், நடத்திய மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுவதாக அறிவித்தனர். ஆனால் ஒரு குழுவினர் வாபஸ் இல்லை என தெரிவித்துள்ளதால், அங்கு குழப்பம் நிலவுகிறது.
Samayam Tamil protesters withdraw in madurai thamuka maithanam
தமுக்கம் மைதானத்தில் போராட்டம் வாபஸ்!


சென்னை,மதுரை, அலங்காநல்லூர், கோவை, உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடந்து வந்தது. இந்நிலையில் சென்னை மெரினாவில் இன்று காலை போராட்டக்காரர்களை அகற்ற போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து ஒவ்வொரு இடமாக போராட்டங்களை வாபஸ் பெறப்பட்டுள்ளன. மேலும் சில இடங்களில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வெளியேற்றனர்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் பேராட்டக்காரர்களுடன், போலீசார், அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து ஒரு பிரிவினர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். ஏராளமானோர் அங்கிருந்து கலைந்து செல்ல துவங்கினர். ஆனால் சிலர் தொடர்ந்து கலையாமல் உள்ளனர்.

அடுத்த செய்தி