ஆப்நகரம்

பெண்களை அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை: முத்தரையர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி, வேலூர் மாவட்டங்களில் தங்கள் சாதி பெண்களை அவதூறாக பேசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முத்தரையர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Samayam Tamil 22 Apr 2019, 1:50 pm
தேனி, வேலூர் மாவட்டங்களில் தங்கள் சாதி பெண்களை அவதூறாக பேசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முத்தரையர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
Samayam Tamil பெண்களை அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை: முத்தரையர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்
பெண்களை அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை: முத்தரையர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்


புதுக்கோட்டை மாவட்டம் பொன் அமராவதி பகுதியில், முத்தரையர் சமூக பெண்களை இழிவாக பேசி ஆடியோ வெளியிட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அனைத்து முத்தரையர் சங்கத்தின் தென்மண்டல ஒருங் கிணைப்பாளரும், தேனி மாவட்ட தலைவருமான கே.எஸ்.பிச்சைமணி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தங்கள் சாதி பெண்களை இழிவாக பேசி ஆடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்க எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.பிச்சைமணி: மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து தங்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பிச் செல்வதாகவும், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று தாங்கள் நம்புவதாகவும் தெரிவித்தார்.
இதேபோல, முத்தரையர் சமூக பெண்களை அவதூறாக பேசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி, வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு, மருத்துவர் அர்ஜுணன் தலைமையில் முத்தரையர் சமூகத்தினர் திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அடுத்த செய்தி