ஆப்நகரம்

உடல் உறுப்பு தானம் பெற்று அறுவை சிகிச்சை என்ற பெயரில் மருத்துவமனை நிர்வாகம் முறைகேடு

தமிழகத்தில் நடைப்பெற்ற உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

Samayam Tamil 3 Sep 2018, 1:03 pm
சென்னை : தமிழகத்தில் நடைப்பெற்ற உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
Samayam Tamil 2


மூளைச் சாவு அடைந்தவர்களிடமிருந்து பெறப்படும், உடல் உறுப்புகளை தானம் பெற்று, அவற்றை ஏற்கனவே காத்திருக்கும் நோயாளிகளுக்கு பொருத்தப்படாமல், முறைகேடாக மருத்துவனை நிர்வாகத்திற்கு வேண்டியவர்களுக்கு, அல்லது சாதகமானவர்களுக்கு பொருத்தப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

முறைகேடு அம்பலம்:
அண்மையில் கேரளா மாநிலத்தை சேர்ந்த மணிகண்டன் விழுப்புரம், கல்லக்குறிச்சி அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்தார்.

அவரின் உடல் உறுப்புகள் திருடப்பட்டு விட்டதாக அவரது உறவினர்கள் கேரளா முதல்வரிடம் புகார் அளித்தனர். கேரளா முதல்வர் பினராயி விஜயன். தமிழக முதல்வரிடம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இது தொடர்பாக மருத்துவமனையில் விசாரணை நடத்த சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டப்பட்டது.

இதில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தின் விதிகளுக்கு புறம்பாக பல முறைகேடுகள் நடந்தது தெரியவந்துள்ளது.


உடல் உறுப்பை தானம் செய்ய மூன்று முறை மறுத்த நிலையில், உறுப்பு தேவைப்படும் நபரை பேச வைத்து தூண்டி சம்மதம் பெற்றுள்ளனர். அப்படி உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு இதயம் தானம் பெறப்பட்டது. ஆனால் அதை லெபனான் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு பொருத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அப்படி பல நேரங்களில் மருத்துவமனை நிர்வாகத்திற்கு சாதகமாக உடல் உறுப்பு பொருத்தப்பட்ட பலர், அந்த உறுப்பு சரியாக பொருந்தாமல் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து உடல் உறுப்பு தானம் குறித்து முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரின் கோரிக்கையாக உள்ளது.

அடுத்த செய்தி