ஆப்நகரம்

Tirunelveli: அரசு அங்கன்வாடி மையத்தில் ஆட்சியரின் மகள்... நெல்லை ஆட்சியருக்கு பாராட்டு

அரசு அதிகாரிகளும், அவர்களின் பிள்ளைகள் அரசு வழங்கும் சேவைகளைப் பெற முன்வருவதே அவற்றின் தரத்தை உயர்த்த ஒரே வழி

Samayam Tamil 11 Feb 2020, 11:32 am
அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாகவே பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் தனது குழந்தையை அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளது பல தரப்பிலும் பாராட்டைப் பெற்று வருகிறது.
Samayam Tamil collector shilpa


நெல்லை மாவட்டத்தின் தற்போதைய ஆட்சியராக இருப்பவர் திருமதி ஷில்பா. இவர் தனது மூன்று வயது மகள் கீதாஞ்சலியை திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார்.

மற்ற மாணவர்களுடன் தரையில் அமர்ந்து பாடங்களைக் கற்கும் கீதாஞ்சலி, தவறாமல் தினமும் ஆர்வத்துடன் வருவதாக அங்கன்வாடி மையக் காப்பாளர் தெரிவிக்கிறார்.

தனியார் குழந்தைகள் காப்பகங்களுக்கு நிகராக தற்போது அரசு அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்காக விளையாட்டு உபகரணங்கள், எளிய முறையில் அடிப்படைக் கல்வி ஆகியவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை: அமைச்சர் செங்கோட்டையன்

பிரபல தமிழ் ஊடகமான விகடன் 2019ஆம் ஆண்டு ஒரு சர்வே நடத்தியது. நடத்திய சர்வே முடிகளின்படி, அரசு ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளிகளில் படித்தால் பள்ளியின் தரம் மேம்படும்' என்று 70.9சதவீத மக்கள் தெரிவித்திருந்தனர்.



மேலும் இந்த சர்வே முடிவுகள் அரசு அதிகாரிகளும், அவர்களின் பிள்ளைகள் அரசு வழங்கும் சேவைகளைப் பெற முன்வருவதே அவற்றின் தரத்தை உயர்த்த ஒரே வழி என்று தெரிவிப்பதாக பொதுமக்கள் பலரும் தெரிவித்தனர்.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாவட்ட ஆட்சியரின் மகள்....ஆச்சர்யத்தில் மக்கள் !!

இதைத் தொடர்ந்தும், இதற்கு முன்பும் பல அரசு அதிகாரிகள்,ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது தன் குழந்தையையும் அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார் நெல்லை ஆட்சியர் ஷில்பா.

லண்டனில் படித்த சிறுவனை விழுப்புரம் அரசுப் பள்ளியில் சேர்த்த பெற்றோர்!


இவையெல்லாம் சாதாரணமானவையாகப் பார்க்க வேண்டிய செய்திகள் தான் என்றாலும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாவட்ட ஆட்சியரே தனது மகளை அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி