ஆப்நகரம்

கோயம்பேடு சந்தைக்கு வர பொதுமக்களுக்கு தடை : சிஎம்டிஏ அதிரடி உத்தரவு!!

சென்னை கோயம்பேடு சந்தைக்கு வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Apr 2020, 5:43 pm
கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள், பூக்கள், பழங்கள் ஆகியவற்றை வாங்க பொதுமக்கள் நேரடியாக வர, நாளை மறுநாள் முதல் (ஏப்ரல் 30) தடை விதிக்கப்படுவதாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அறிவித்துள்ளது.
Samayam Tamil market


இதற்கு மாற்றாக, சென்னை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள திறந்தவெளி மைதானங்கள், பேருந்து நிலையங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், கோயம்பேடு சந்தையில் இதுநாள்வரை இயங்கி வந்த பூ மார்க்கெட், பழங்கள் அங்காடி ஆகியவை நாளை மறுநாள் முதல் மறு உத்தரவு வரும் வரை, மாதவரம் பேருந்து நிலையத்தில் செயல்படும்.

கோயம்பேடு சந்தை இடம் மாறுகிறதா?

அதேசமயம், காய்கறிகள், உணவு தானியங்களை ஏற்றிவரும் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வாகனங்கள், சரக்குகளை இறக்க தினமும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கோயம்பேடு சந்தைக்குள் அனுமதிக்கப்படும்.

இதேபோன்று, தினமும் அதிகாலை முதல் காலை 7:30 மணி வரை, வியாபாரிகள் சில்லறை விற்பனைக்கு காய்கறிகள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள்.

கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் சமூகபரவலை தடுப்புதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் உத்தரவுபடி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் சிஎம்டிஏ உறுப்பினர் -செயலர் பிறப்பித்துள்ள உத்ததரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தையில் பணிபுரிந்து வந்த இரண்டு நபர்களுக்கு அண்மையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி