ஆப்நகரம்

சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

தீபாவளிக்கு முன்தினம் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNN 8 Oct 2017, 12:34 pm
தீபாவளிக்கு முன்தினம் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Samayam Tamil public request southern railway to take needy action for diwali special train
சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை


சென்னையில் இருக்கும் முக்கால்வாசி மக்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தான். தீபாவளி போன்ற பெரும்பண்டிகைகளுக்கு அனைவரும் சொந்த ஊருக்குச் சென்று கொண்டாடி வருவார்கள்.


இதற்காக, கடந்த ஜீலை 15 ம் தேதி், தீபாவளி ரயில் முன்பதிவு தொடங்கியது. ஆனால், டிக்கெட் முன்பதிவு, துவங்கிய சில மணி நேரத்திலேயே முடிந்து விட்டது.


தீபாவளி பண்டிகைசையொட்டி தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யவும் அனைவராலும் முடியாத காரியம். இந்நிலையில், தீபாவளிக்கு முன்தினம் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஏற்கனவே, தீபாவளிக்காக 9 சுவிதா சிறப்பு ரயில்களை இயக்க போவதாக தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. ஆனால், இந்த ரயில்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், சென்னையில் வேலைபார்க்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் குடும்பத்துடன், சிறப்பு ரயில்களில் பயணம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்தாண்டு தீபாவளிக்கு முன்தினம் பகல் நேர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. அதேபோல், தீபாவளிக்கு மறுநாளும் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்களை இயக்கியது. இதனால், கடந்தாண்டு தென்மாவட்ட மக்கள் ஒரளவுக்கு திருப்பதியடைந்தனர்.

அடுத்த செய்தி