ஆப்நகரம்

சி.ஆர்.சரஸ்வதி மீது அழுகிய தக்காளி வீசிய பொதுமக்கள்!

சி.ஆர்.சரஸ்வதி மீது அழுகிய தக்காளி வீசிய பொதுமக்கள்!

TOI Contributor 1 Apr 2017, 8:56 am
ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சி.ஆர்.சரஸ்வதி மீது அப்பகுதி மக்கள் அழுகிய தக்காளி மற்றும் காய்கறிகள், பழங்களை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.
Samayam Tamil public throw tomotto to admk cr saraswathi
சி.ஆர்.சரஸ்வதி மீது அழுகிய தக்காளி வீசிய பொதுமக்கள்!


அதிமுகவின் சசிகலா அணியை சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதி, அதிமுக அம்மா அணியை சேர்ந்த டிடிவி தினகரனை ஆதரித்து ஆர்கே நகரில் பரப்புரையில் ஈடுபட்டார். சிஆர் சரஸ்வதி திறந்த ஜீப்பில் ஆர்கே நகர் மார்க்கெட் அருகில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு இருந்த மதுசூதனன் ஆதரவாளர்கள், ஜெயலலிதா மருத்துவமனையில் இட்லி சாப்பிட்டார், இடியாப்பம் சாப்பிட்டார் என்று சொன்னீங்களே, ஆனா ஜெயலலிதாவை பிணமா தானே கொண்டு வந்தீங்க என்று கேள்வி எழுப்பி கூச்சலிட்டனர்.

கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய சரஸ்வதி, அங்கு இருந்து செல்ல முடியாமல் மாட்டிக்கொண்டார். அப்போது மார்க்கெட்டுக்கு வந்த பெண்கள் அங்கு கிடந்த அழுகிய தக்காளி, காய்கறிகளை எடுத்து சரஸ்வதி மீது வீசினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி