ஆப்நகரம்

குளவியால் உயிரிழந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ..?

புதுச்சேரியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் புருஷோத்தமன் குளவி கடித்ததில் உயிரிழந்தாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்...

Samayam Tamil 2 Nov 2019, 8:10 pm
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் புருஷோத்தமன். இவர் புதுச்சேரி மாநிலத்தின் மணவெளி தொகுதி முன்னாள் அதிமுக சட்ட மன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்தவர்.
Samayam Tamil DMK_ktRaXLi


இவருக்கு விழுப்புரம் விக்கிரவாண்டியில் சொந்தமாக விவசாயம் நிலம் இருக்கிறது. அவ்வப்போது விழுப்புரம் வந்து தனது விவசாய நிலத்தின் விளைச்சலை விசாரித்துவிட்டு, மீண்டும் புதுச்சேரி திரும்புவார்.

இந்நிலையில், இன்று தனது விவசாய நிலத்தைப் பார்வையிடப் புருஷோத்தமன் விழுப்புரம் வந்திருந்தார். அப்போது, அவரை செங்குளவி ஒன்று கொட்டி உள்ளது. குளவி கொட்டிய சில நிமிடங்களில் புருஷோத்தமனுக்குத் தலை சுற்றியுள்ளது.

எச் ராஜா, ஸ்டாலின் கைகுலுக்கல், எதுக்குனு தெரியுமா..?

இதனால், அவரை உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு அங்கிருந்தவர்கள் கொண்டு சென்றுள்ளனர். எனினும், புருஷோத்தமன் வழியிலே உயிரிழந்துவிட்டார்.

வழக்கறிஞர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு..! டெல்லியில் பரபரப்பு..

குளவி கொட்டியதால் உயிரிழந்தாரா, இல்லை மாரடைப்பால் உயிரிழந்தாரா என்பது குறித்து இப்போதுவரை தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

அடுத்த செய்தி