ஆப்நகரம்

கேரள மக்களுக்கு மனநல ஆலோசனை: புதுச்சேரி ஜிப்மர்

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுச்சேரி ஜப்மர் மருத்துவமனை சார்பில் திங்கட்கிழமை முதல் மனநல ஆலோசனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Aug 2018, 4:38 pm
கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுச்சேரி ஜப்மர் மருத்துவமனை சார்பில் திங்கட்கிழமை முதல் மனநல ஆலோசனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Dk9MTE8V4AEUMiB


கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் 300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நிவாரண முகாம்களில் 6 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளிக்கும் அம்மாநிலத்துக்கு பல தரப்பிலும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையும் கேரள மக்களுக்கு உதவ முன்வந்துள்ளது.

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை காலை 9.30 மணி முதல் மனநல ஆலோசனை அளிப்பதாக ஜிப்மர் அறிவித்துள்ளது. 78670 86311 என்ற எண்ணில் 24 மணி நேரமும் மனநல ஆலோசனைக்காக தொடர்புகொள்ளலாம் எனவும் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் ஆலோசனை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி