ஆப்நகரம்

சொத்துக் குவிப்பு வழக்கில் புதுச்சேரி எம்எல்ஏவுக்கு 1 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் புதுச்சேரி எம்எல்ஏ அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தைக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 30 Oct 2018, 8:27 pm
சொத்துக்குவிப்பு வழக்கில் புதுச்சேரி எம்எல்ஏ அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தைக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil court order


புதுச்சேரி தட்டான்சாவடி தொகுதி என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் அசோக் ஆனந்த். இவருடைய தந்தை ஆன்ந்த், கடந்த 2007-2008 ஆண்டுகளில் புதுச்சேரி பொதுப்பணித்துறையில் தலைமை பொறியாளராக இருந்தார். அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ.,க்கு புகார் சென்றது.

இந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ நடத்திய விசாரணையில் ஆன்ந்த் அவரது மனைவி ஜெயலட்சுமி மற்றும் மகன் அசோக் ஆன்ந்த் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சுமார் 3.17 கோடி ரூபாய் அளவில் சொத்து சேர்த்தது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரும் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதனிடையே ஆனந்த்தின் மனைவி விஜயலட்சுமி இறந்தார். அதனால், அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதிகள், அசோக் ஆனந்த் மற்றும் ஆனந்த் குற்றவாளிகள் என்று அறிவித்தனர். மேலும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இரண்டு பேருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், ஒரு வருட சிறைத்தண்டனையும் வழங்கினர். அபராதத் தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில், தண்டனை காலம் மேலும் 3 மாதங்களுக்கு உயர்த்தப்படும் என்றும் கூறினர். அதோடு அவர்கள் சேர்த்து வைத்த வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி