ஆப்நகரம்

ஜல்லிக்கட்டுக்காக பைக் பயணம் தொடங்கிய பெண் கைது

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி பைக் பயணத்தைத் தொடங்கிய புதுச்சேரி பெண் அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

TNN 4 Jan 2017, 4:44 pm
புதுச்சேரி: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி பைக் பயணத்தைத் தொடங்கிய புதுச்சேரி பெண் அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Samayam Tamil puducherry woman on bike rally to support jallikattu arrested
ஜல்லிக்கட்டுக்காக பைக் பயணம் தொடங்கிய பெண் கைது


புதுச்சேரியின் ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. மேலாண்மை துறையின் முதுகலைப் பட்டம் பெற்ற இவருக்கு நாட்டு மாடுகள் மீது விரும்பம் அதிகம். நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜல்லிக்கட்டு நடத்துவது அவசியம் என்று வலியுறுத்தும் அவர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு நீண்ட பயணம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடல் இருந்து நேற்று முன்தினம் பைக் பயணத்தை தொடங்கிய அவர் நேற்று மதுரை வந்தார். இன்று தொடர்ந்து அலங்காநல்லூர் நோக்கிச் சென்றார். அப்போது அவரை வரவேற்கும் விதமாக வீரவிளையாட்டு பேரவை மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் இரு சக்கர வாகனங்களில் அவருடன் இணைந்துகொண்டனர்.

அவர்கள் சிக்கந்தர்சாவடியை அடைந்தபோது அப்பகுதிக் காவல்துறையினர் மகேஷ்வரியை தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர். அலங்காநல்லூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் வீரவிளையாட்டு பேரவை மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுடன் குழுவாக வந்ததற்காக கைது செய்துசெய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அடுத்த செய்தி