ஆப்நகரம்

எச்சரிக்கும் மாவட்ட ஆட்சியர்; நீடிக்கும் 144 தடை - பதற்றம் தணியாத பொன்னமராவதி!

பொன்னமராவதி சம்பவத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Apr 2019, 11:08 pm
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் ஆடியோ ஒன்று வெளியானது. இதனால் அப்பகுதியே வன்முறைக் களம் ஆனது. போலீசார் மீதும், அவர்களின் வாகனம் மீதும், தனியார் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
Samayam Tamil Pudukottai Violence


உள்ளூர் காவல் நிலையம் முன்பு 5,000க்கும் மேற்பட்டோர் கூடினர். இதையடுத்து அங்கு குவிக்கப்பட்ட போலீசார் தடியடி நடத்தி பொதுமக்களை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வெளியான சர்ச்சை ஆடியோ - வெடித்தது வன்முறை; புதுக்கோட்டை கிராமத்தில் நடந்தது என்ன!
இந்த சம்பவத்தை அடுத்து, பொன்னமராவதியை சுற்றியுள்ள பகுதிகளில் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சி சரக துணை ஐஜி லலித லட்சுமி சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளார்.

இந்நிலையில் பொன்னமராவதி சம்பவம் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சமூக வலைத்தளங்களில் வீண் வதந்திகளை பரப்பினால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி