ஆப்நகரம்

கல்லூரிக்கு சென்ற மாணவி தலைமுடியில்லாமல் சடலமாக மீட்பு..!!

புதுக்கோட்டை: கல்லூரிக்கு சென்ற மாணவி தலைமுடி வெட்டப்பட்ட நிலையில், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரிய அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

Samayam Tamil 21 Dec 2018, 7:14 pm
கல்லூரிக்கு சென்ற மாணவி தலைமுடி வெட்டப்பட்ட நிலையில், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரிய அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
Samayam Tamil தலைமுடி வெட்டப்பட்டு மாணவி படுகொலை


புதுக்கோட்டையை சேர்ந்த ஸ்ரீரங்கம் என்பவரது பேத்தி ஆர்த்தி. இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் இவர் மங்களா கோயில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

அப்போது அவரது தலைமுடி கொத்தாக வெட்டப்பட்டு அருகில் வீசப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து மாணவியின் புத்தகப் பையை வைத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆர்த்தியின் உடலை மீட்டு உடல்கூறாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், அவரது வெட்டப்பட்ட தலைமுடியையும் போலீசார் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ஆர்த்தி ஏன் முடி வெட்டப்பட்டு கொல்லப்பட்டார்? ஏதாவது சைக்கோ கொலையாளியால் கொலை செய்யப்பட்டாரா? ஒருதலைக் காதலால் நேர்ந்த கொடூரமா என்ற கோணங்களில் புதுக்கோட்டை போலீசார் ஆர்த்தி கொலை குறித்து புகார் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி