ஆப்நகரம்

ஆணவக் கொலை செய்துவிடுவார்கள்; முதல்வருக்கு கண்ணீர் கடிதம் எழுதிய தாய்!

புதுக்கோட்டையில் காதல் திருமணம் செய்து கொண்ட தன் மருமகளை காப்பாற்றும்படி தாய் ஒருவர் கண்ணீர் கடிதம் எழுதியுள்ளார்.

Samayam Tamil 12 Feb 2018, 8:04 pm
புதுக்கோட்டையில் காதல் திருமணம் செய்து கொண்ட தன் மருமகளை காப்பாற்றும்படி தாய் ஒருவர் கண்ணீர் கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil pudukottai mother seeking help from cm palanisamy for her love marriage son
ஆணவக் கொலை செய்துவிடுவார்கள்; முதல்வருக்கு கண்ணீர் கடிதம் எழுதிய தாய்!


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகி்ல் உள்ள வெள்ளாகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மரியசூசை-பாத்திமா மேரி தம்பதியினர். இவருடைய மகன் நாஞ்சில் ரூபன் அருள், அருகில் உள்ள ஆலங்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த கோப்பெருந்தேவி என்பவரை காதலித்து திருச்சியில் பதிவு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சொந்த ஊரில் இருந்தால் ஆபத்து என்று எண்ணி, கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி திருச்சியில் குடிபெயர்ந்தனர்.

இதனால் ஆத்திரமைடைந்த கோப்பெருந்தேவி உறவினர்கள், பையனின் வீட்டை நோக்கி படையெடுத்த, மரிய சூசையையும், பாத்திமா மேரியையும் மிரட்டினர்.

பின்னர், காதலித்த இருவரும் திருச்சியில் இருப்பதை அறிந்த பெண் வீட்டார்கள், அங்கு சென்று இருவரையும் பிடிக்கச் சென்றனர். இதை அறிந்த நாஞ்சிலும், கோபெருந்தேவியும் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இருவரும் மேஜர் என்பதால், அவர்களது திருமணம் சட்டபடி செல்லும் என்று கூறி பெண் வீட்டார்களை எச்சரித்து, இருவரையும் மரியசூசையுடன் அனுப்பி வைத்தனர்.

ஆனால், காரில் ஊருக்கு திரும்பும் வழியில் மீண்டும் இருவரும் தப்பி ஓடினர். ஊருக்கு வந்ததும் காதலர்களை பிரிக்க எண்ணிய பெண் வீட்டார்கள், வழியில் தப்பியோடியதால், மரிய சூசை தான் எங்கையோ வைத்திருக்க வேண்டும் என்று தற்போது மிரட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ஆணவக் கொலை செய்து விடுவார்களோ என்று அஞ்சிய தாய் பாத்திமா மேரி, பெண் வீட்டார்களிடம் இருந்து தங்கள் மகனையும் மருமகளையும் காப்பாற்ற வேண்டும் என்று கலெக்டரில் இருந்து காவல்துறை உயர் அதிகாரிகள், முதல்வர் வரை கண்ணீர் கடிதம் எழுதியுள்ளார்.

அடுத்த செய்தி