ஆப்நகரம்

அதிமுகவில் இணையும் அமமுக அதிருப்தியாளர் புகழேந்தி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ற நல்ல மனிதருக்கு இயற்கை உள்ளிட்ட அனைத்துமே சாதகமாக உள்ளது. அவரது தலைமையை ஏற்று அதிமுகவில் இணையவுள்ளோம் என புகழேந்தி தெரிவித்தார்.

Samayam Tamil 10 Nov 2019, 4:21 pm
சேலம்: புகழேந்தி உள்ளிட்ட அமமுக அதிருப்தியாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையவுள்ளனர்.
Samayam Tamil புகழேந்தி
புகழேந்தி


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு திருப்பங்களில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஓரங்கட்டப்பட்டு, ஈபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் அக்கட்ச்சி ஒருங்கிணைந்ததும் ஒன்று. அதன்பின்னர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை டிடிவி தினகரன் ஆரம்பித்தார். ஆனால், கட்சியின் முக்கிய நபர்களாக வலம் வந்த தங்க தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் டிடிவி கட்சியில் இருந்து வெளியேறி வேறு கட்சியில் இணைந்தனர்.

மன்னார்குடி மாஃபியாக்களுக்கு அதிமுக ஒன்றும் லாலா கடை அல்ல: நமது அம்மா விமர்சனம்!!

அந்த வகையில் அதிருப்தி நிர்வாகியாக இருக்கும் அமமுக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினகரனை பகிரங்கமாக திட்டுவது போன்ற வீடியோ ஒன்ற சமூக வலைதளங்களில் வெளியானது. இதனை புகழேந்தி ஒப்புக்கொண்ட நிலையில், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். மேலும் தினகரனின் நடவடிக்கைகள் சமீப காலமாக சசிகலாவிற்கு பிடிக்கவில்லை எனவும், புகழேந்தியை கட்சியை விட்டு வெளியேற்றும் எண்ணம் அவருக்கு இல்லை எனவும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரங்கள் அனைத்துக்கும் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் தீர்வு எட்டப்படும் என அமமுக வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.

அதிமுகவில் சசிகலாவா? டிடிவி தினகரன் சொல்வது என்ன?

இந்நிலையில், சேலத்தில் அமமுக அதிருப்தியாளர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற அமமுக அதிருப்தி நிர்வாகிகள் கூட்டத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ற நல்ல மனிதருக்கு இயற்கை உள்ளிட்ட அனைத்துமே சாதகமாக உள்ளது. அவரது தலைமையை ஏற்று அதிமுகவில் இணையவுள்ளோம் என தெரிவித்தார்.

சசிகலா விடுதலையில் சிக்கல்: கைவிரித்த சிறைத்துறை இயக்குநர்

மேலும் அவர் கூறுகையில், சிறிது காலம் கூவம் போன்ற சாக்கடையில் நான் விழுந்து கிடந்தேன். இப்போது வற்றாத ஜீவந்தியோடு இணைய உள்ளோம். சசிகலா மிக விரைவில் வெளியே வருவார். சசிகலா மீதான மரியாதை எனக்கும் என்றும் குறையாது. சசிகலா சிறையிலிருந்து வெளியே வருவதை டிடிவி தினகரன் விரும்பவில்லை. அ.ம.மு.க என்னும் கம்பெனியை நம்பி இனி இளைஞர்கள் வீண் போக வேண்டாம். தினகரனை நம்பிச் சென்றவர்களை அவரால் காப்பாற்ற முடியவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

அடுத்த செய்தி