ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் வீரமரணமடைந்த சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரது குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பகுதியிக்கு துணை ராணுவப்படையைச் சேர்ந்த வீரர்கள் 70க்கும் அதிகமான வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, புல்வாமா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த போது 350 கிலோ வெடிபொருட்களுடன் எஸ்சுவி காரில் ஏற்றி வந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி துணை ராணுவப்படை வீரர்களின் வாகனத்தில் மீது மோதி வெடிக்கச் செய்தனர். இதில், 38 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், பலர் காயமடைந்த நிலையில், பாதாமிபாக் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அவந்திபுரா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல் சம்பவத்தில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு, வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களான சிவலப்பேரியின் சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் கார்குடி சிவசந்திரன் ஆகியோரது குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பகுதியிக்கு துணை ராணுவப்படையைச் சேர்ந்த வீரர்கள் 70க்கும் அதிகமான வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, புல்வாமா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த போது 350 கிலோ வெடிபொருட்களுடன் எஸ்சுவி காரில் ஏற்றி வந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி துணை ராணுவப்படை வீரர்களின் வாகனத்தில் மீது மோதி வெடிக்கச் செய்தனர். இதில், 38 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், பலர் காயமடைந்த நிலையில், பாதாமிபாக் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அவந்திபுரா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல் சம்பவத்தில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு, வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களான சிவலப்பேரியின் சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் கார்குடி சிவசந்திரன் ஆகியோரது குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.