ஆப்நகரம்

அரசு ஊழியர்கள் மீது சுமை; நியாயமா? கேள்வி எழுப்பும் டிடிவி தினகரன்!!

''அரசு எந்திரத்திற்கு அச்சாணியாக இருப்பவர்கள் தலையிலேயே நிதி நெருக்கடியை சுமத்துவது எப்படி சரியாக இருக்க முடியும்?'' என்று அமமுக நிறுவனர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 28 Apr 2020, 12:54 pm
அரசு ஊழியர்கள் மீது சுமையை வைப்பது நியாயம் இல்லை என்று அம்முக நிறுவனர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil டிடிவி தினகரன்


இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் பதிவில், ''நெருக்கடியான நேரத்தில் களத்தில் நின்று அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிவரும் சுகாதாரம், உள்ளாட்சி, வருவாய், கூட்டுறவு துறை ஊழியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கான அகவிலைப்படி உயர்வு, ஈட்டியவிடுப்பு ஆகியவற்றை நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையதல்ல.

மேலும் இவர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (P.F) வழங்கப்படும் வட்டியைக் குறைத்திருப்பதும் சரியானதல்ல. தங்கள் பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றிக்காக இந்தப் பணத்தை நம்பியிருக்கும் ஊழியர்கள் அரசின் முடிவால் பாதிக்கப்படுவார்கள்.

24 மணி நேரத்தில் இடிக்கப்பட்ட கொரோனா சுவர்!
ஸ்டாலின் செய்வது உரிமைப் போர்: விஜயபாஸ்கருக்கு துரைமுருகன் பதில்!
தமிழக அரசு கஜானாவில் இருந்து தேவையற்ற முறையில் செல்லும் எத்தனையோ செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு, அரசு எந்திரத்திற்கு அச்சாணியாக இருப்பவர்கள் தலையிலேயே நிதி நெருக்கடியை சுமத்துவது எப்படி சரியாக இருக்க முடியும்?'' என்று தெரிவித்துள்ளார்.
ட்ரோன் கேமராவிற்கு பயந்து முட்புதருக்குள் பதுங்கிய இளைஞர்கள்!

அடுத்த செய்தி