ஆப்நகரம்

2 வாரங்களுக்கு பின் மக்கள் நலக் கூட்டணி தொகுதி பங்கீடு: முத்தரசன்

தமிழகத்தில் மே 16-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால், இன்னும் 2 வாரங்களுக்கு பின்னர் தான் மக்கள் நலக் கூட்டணி தொகுதி பங்கீடுதுவங்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்

TNN 5 Mar 2016, 11:43 am
சென்னை: தமிழகத்தில் மே 16-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால், இன்னும் 2 வாரங்களுக்கு பின்னர் தான் மக்கள் நலக் கூட்டணி தொகுதி பங்கீடு துவங்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil pwa seat sharing to commence after 2 weeks
2 வாரங்களுக்கு பின் மக்கள் நலக் கூட்டணி தொகுதி பங்கீடு: முத்தரசன்


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மக்கள் நலக் கூட்டணியின் 4-ஆம் கட்ட பரப்புரை விரைவில் தொடங்கும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. தேர்தல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படாமல் நடுநிலமையாக செயல்படும் என்று நம்புகிறோம். மாநிலம் முழுவதிலும் பண பட்டுவாடவை தவிர்க்க பறக்கும் படையினர் தீவிரமாக செயலாற்ற வேண்டும்.

இன்னும் 2 வாரங்களுக்கு பின்னர் தான் மக்கள் நலக் கூட்டணி தொகுதி பங்கீடு துவங்கும். தேமுதிக மற்றும் தமாக போன்ற கட்சிகள் எங்கள் கூட்டணியை நாடி வரும் காலம் விரைவில் வரும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, செங்கல்பட்டில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், 'திமுக மற்றும் அதிமுகவினரால் முறைகேடாக சேர்க்கப்படும் சொத்துக்கள் மக்கள் நலக் கூட்டணி அரசு பதவியேற்றவுடன் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமை ஆக்கப்படும்' என்று தெரிவித்தனர்.

அடுத்த செய்தி