ஆப்நகரம்

தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு கடைசி இடம்: பொன். ராதாகிருஷ்ணன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி கடைசி இடத்தை தான் பிடிக்க முடியும் என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

TNN 28 Mar 2016, 2:37 pm
கன்னியாகுமரி: தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி கடைசி இடத்தை தான் பிடிக்க முடியும் என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil pwg will get only last place in elections says pon radhakrishnan
தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு கடைசி இடம்: பொன். ராதாகிருஷ்ணன்


இன்று கன்னியாகுமரியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய இணையமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடையே கருத்து வேற்றுமை உள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளர் வைகோவின் தவறான வழிகாட்டுதல் இந்த அணிக்கு தோல்வியை தான் தரும்.

சட்டமன்ற தேர்தலில் இந்த அணி கடைசி இடத்தை தான் பிடிக்கும். எங்கள் தேர்தல் பணிகளை நாங்கள் ஏற்கனவே துவக்கிவிட்டோம். எங்கள் கட்சியின் மீதும், பிரதமர் மோடி அவர்களின் நலத்திட்டங்கள் மீதும் மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

மேலும், எளிதில் அணுக முடியாத முதல்வரால் தமிழகம் மிகவும் பின்தங்கி விட்டது என்றும் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

அடுத்த செய்தி