ஆப்நகரம்

ஆள் தெரியாமல் சுகாதாரத்துறை அதிகாரிக்கே மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது!

பி.ஏ மட்டுமே படித்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 3 Apr 2018, 9:27 pm
மணப்பாறை: பி.ஏ மட்டுமே படித்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
Samayam Tamil Quack arrested
போலி மருத்துவர் கைது


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துவரங்குறிச்சி பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரி சம்சாத் பேகம் தலமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு காவல் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர்.

அப்போது போலி மருத்துவர் சின்னதம்பி(35) மற்றும் செவிலியர்கள், வந்திருந்த சுகாதாரத்துறை பெண் அதிகாரிக்கும், பிற அதிகாரிகளுக்கும் மருத்துவம் பார்த்தனர்.

இதையடுத்து போலி மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் போலி மருத்துவர் பி.ஏ மட்டும் படித்திருப்பது தெரியவந்தது.

உடனே போலி மருத்துவர் சின்னத்தம்பி, 4 செவிலியர்கள் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த மருந்துகள், உபகரணங்களை பறிமுதல் செய்து, மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.

Quack held in Trichy.

அடுத்த செய்தி