ஆப்நகரம்

மனைவி திட்டியதால் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய கணவர்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பாதிக்கப்பட்ட கணவர் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் நடந்துள்ளது.

Samayam Tamil 2 Sep 2018, 11:55 am
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பாதிக்கப்பட்ட கணவர் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் நடந்துள்ளது.
Samayam Tamil 149211058629428
மனைவி உடன் தகராறு: தனக்கு தான் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய கணவர்


சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன் (37). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

இதனால் அன்பரசனுக்கும், அவரது மனைவிக்கு தினசரி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று புதுப்பாளையம் கிராமம் முழுவதும் அன்பரசனுக்கு அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள், அன்பரசன் வீட்டுக்கு மாலையுடன் வந்துள்ளனர். ஆனால் வீட்டுகுள் அன்பரசன் உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், நடந்தவை குறித்து அவரிடம் விசாரித்தனர்.

அப்போது அன்பரசன், நான் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தேன். ஆனால் என் மனைவி வழக்கம்போல் என்னுடன் சண்டை போட ஆரம்பித்துவிட்டாள்.

நீண்ட நேரமாகியும் மனைவி சண்டையை நிறுத்தாததால் மனது உடைந்த நான் எனக்கு நானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்ட முடிவு செய்து ஊர் முழுவதும் ஒட்டிவிட்டேன். அதுமட்டுமின்றி இப்போது எலி மருந்தையும் சாப்பிட்டுவிட்டேன் என்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்களும் நண்பர்களும், எலி மருந்தை சாப்பிட்ட அன்பரசனை மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்குப் பின்னர் அவர் நலமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மனைவியுடன் போட்ட சண்டையால் கணவர் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிக்கொண்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி