ஆப்நகரம்

சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் நியமனம்!

சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் ஆர்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்

Samayam Tamil 1 Jun 2020, 8:59 pm
செம்மொழி தமிழ் குறித்து ஆராய்ச்சிகளை நடத்துவதற்காக சென்னையில் 2008ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. தமிழகத்தின் முதலமைச்சர்தான் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் ஆவார். இது கவுரவப் பதவியாகும்.
Samayam Tamil செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்


இந்த நிறுவனத்தின் இயக்குனர்தான் அனைத்து அதிகாரமும் கொண்டவர் என்பதால், அவரால்தான் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும். ஆனால், இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே அதற்கு முழுநேர இயக்குனர் நியமிக்கப்படவில்லை என்பதால் அந்நிறுவனம் சொல்லிக்கொள்ளும்படி எந்த ஆராய்ச்சியையும் மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

இது மத்திய அரசின் நிறுவனம் என்பதால் சென்னையிலுள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் இருந்து ஒருவரை பொறுப்பு இயக்குனராக நியமிப்பது வழக்கமாக இருந்தது. அதில் பெரும்பாலானோருக்கு தமிழ் தெரியாமலும் இருந்துள்ளது. திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் பதிவாளரான பழனிவேல் என்பவர் தற்போது பொறுப்பு இயக்குனராக உள்ளார்.

பெற்றோரே நீங்க சொல்லுங்க... பள்ளிகள எப்போது திறக்கலாம்? -தமிழக அரசு!

எனவே, சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு உடனடியாக நிலையான இயக்குனரை நியமித்து, தமிழாய்வுப் பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில், சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் ஆர்.சந்திரசேகரனை நியமித்து மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி