ஆப்நகரம்

ஆர்.கே. நகரில் குக்கர் கோலம் போட்டால் ரூ. 500!!

ஆர்.கே. நகர் தொகுதியில் குக்கர் கோலம் போட்டு இருந்தால் தினகரன் தரப்பில் ரூ. 500 வழங்கப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

TOI Contributor 19 Dec 2017, 2:30 pm
ஆர்.கே. நகர் தொகுதியில் குக்கர் கோலம் போட்டு இருந்தால் தினகரன் தரப்பில் ரூ. 500 வழங்கப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.
Samayam Tamil r k nagar by election rs 500 gift to cooker kolam in rk nagar
ஆர்.கே. நகரில் குக்கர் கோலம் போட்டால் ரூ. 500!!


தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி நடக்க இருக்கும் ஆர். கே. நகர் தொகுதி இடைத் தேர்தல் நாட்டின் கவனத்தை ஈர்த்து இழுக்கிறது என்று கூறினால் மிகையாது. பணப்பட்டுவாடா குற்றச்சாட்டின் கீழ் ஏற்கனவே தேர்தல் ரத்தான ஆர்.கே. நகரில் வரும் 21ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.

இங்கு அதிமுக சார்பில் போட்டியிடும் மதுசூதனன், திமுக சார்பில் போட்டியிடும் மருது கணேஷ் மற்றும் குக்கர் சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் தினகரன் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. தினமும் இங்கு ரூ. 3 கோடி பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும், இதுவரை ரூ. 100 கோடிக்கு மேல் இந்தத் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதல் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரை குற்றம்சாட்டி இருந்தனர்.

இதனால் தேர்தல் ரத்தாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று தொகுதி மக்களுக்கு தினகரன் பணப் பட்டுவாடா செய்து வருகிறார் என்பது அதிமுகவின் குற்றச்சாட்டு. மேலும், சின்னமான குக்கரையே அந்த தொகுதி மக்களுக்கு வழங்கி வருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதற்கிடையே, ஆர்.கே. நகர் தொகுதியில் யார் தங்களது வீடு முன்பு குக்கர் கோலம் போடுகிறார்களோ அவர்களுக்கு ரூ. 500 தினகரன் தரப்பில் வழங்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிபடுத்தும் வகையில் பலரது வீடு முன்பு குக்கர் கோலம் போடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி