ஆப்நகரம்

மக்கள் மனதில் மாற்றம் வேண்டும் : தா.பாண்டியன்

மத்தியில் உள்ள ஆளும் பாஜகவின் திட்டப்படிதான் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

TNN & Agencies 24 Nov 2017, 1:09 pm
மத்தியில் உள்ள ஆளும் பாஜகவின் திட்டப்படிதான் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
Samayam Tamil r k nagar election the people has to decide the result d pandian
மக்கள் மனதில் மாற்றம் வேண்டும் : தா.பாண்டியன்


இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் மத்தியில் ஆளும் பாஜகவின் விருப்பப்படி எல்லாம் நடந்து வருகிறது. அந்தவகையில் இப்போது இடைத் தேர்தலை அறிவித்துள்ளனர். மக்களின் கருத்தைத் தெரிந்து கொள்ளவும் இது உதவும். மக்களை சந்திப்போம்.

பாஜாவின் அட்டூழியங்களுக்கு மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும் . அதையெல்லாம் நம்மால் தடுக்க முடியுமா என்பதை மக்களைத் திரட்டித்தான் பார்க்க முடியும்.

மக்கள் மனதில் மாற்றம் இருக்கும், இருக்க வேண்டும் என நம்புகிறேன். காலம் வாய்ப்புகளைக் கொடுக்கிறது. மக்கள் பழையசெக்கு மாடு மாதிரி இருக்கப் போகிறார்களா அல்லது மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார் தா.பாண்டியன்.

அடுத்த செய்தி