ஆப்நகரம்

ஸ்ரீரங்கம் அறநிலைத் துறை உதவி ஆணையர் பணியிடை நீக்கம்!!

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடந்த முறைகேடு தொடர்பாக, ஸ்ரீரங்கம் கோவில் அறநிலைத்துறையில் உதவி ஆணையராக பணியாற்றிய ஆர்.ரத்தினவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 2 Aug 2018, 3:51 pm
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடந்த முறைகேடு தொடர்பாக, ஸ்ரீரங்கம் கோவில் அறநிலைத்துறையில் உதவி ஆணையராக பணியாற்றிய ஆர்.ரத்தினவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil ஸ்ரீரங்கம் அறநிலைத் துறை உதவி ஆணையர் பணியிடை நீக்கம்!!
ஸ்ரீரங்கம் அறநிலைத் துறை உதவி ஆணையர் பணியிடை நீக்கம்!!


கடந்த சில மாதங்களாக, சிலை திருட்டு வழக்குடன் தொடர்புடையதாக, தமிழக கோவில்களில் பணியாற்றி வரும் அறநிலைத் துறை அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனால், தமிழக மக்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பொருட்கள் வாங்குவது மற்றும் டெண்டர் விடுவது போன்றவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்தப் புகார்கள் தொடர்பாக, ஸ்ரீரங்கம் அறநிலைத்துறை உதவி ஆணையர் ஆர்.ரத்தினவேல் விசாரணை மேற்கொண்டார். ஆனால், அந்த விசாரணை நேர்மையான முறையில் நடைபெறவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்னும் சில நாட்களில் ஓய்வு பெற உள்ள நிலையில், ஸ்ரீரங்கம் அறநிலைத்துறை உதவி ஆணையர் ஆர்.ரத்தினவேலை இந்து சமய அறநிலைத்துறை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளது.

அடுத்த செய்தி