ஆப்நகரம்

மாணவர்களை ஆல் பாஸ் பண்ணுங்க: சரத்குமார் வேண்டுகோள்!

பத்தாம் வகுப்பு மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி செய்ய தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Samayam Tamil 8 Jun 2020, 9:08 pm
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் ஜூன் 15ஆம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், தேர்வுகளை தள்ளி வைப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil சரத்குமார்
சரத்குமார்


இந்த நிலையில், அண்டை மாநிலங்கள், மேலை நாடுகளில் அறிவித்திருப்பது போல, அனைத்து 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களையும் தேர்வின்றி தேர்ச்சி செய்து 11 ஆம் வகுப்பு செல்வதற்கு பரிசீலிக்குமாறு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை பணியாளர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு, 10 ஆம் வகுப்பு பொது தேர்வு குறித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் எனவும் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

10ஆம் வகுப்பு தேர்வு: தெலங்கானாவிடம் பாடம் படியுங்கள் - ஸ்டாலின் அட்வைஸ்!

முன்னதாக, 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க தெலங்கானா மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்த காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்களை கணக்கிட்டு பள்ளி தேர்வுகளின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு கிரேடு வழங்கவும் அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி