ஆப்நகரம்

தஞ்சை கடலோர பகுதியில் சாகர் கவாஜ் தீவிர வாத தடுப்பு ஒத்திகை!

தீவிரவாதிகள் பெரும்பாலும் கடல் வழியைப் பயன்படுத்தி ஊடுருவல் செய்யலாம் என்பதால் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை ஆகியோர் கடலோர பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Samayam Tamil 18 Jul 2019, 5:09 pm
தஞ்சை கடலோர பகுதியில், தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் சாகர் கவாஜ் தீவிர வாத தடுப்பு ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.
Samayam Tamil தஞ்சை கடலோர பகுதியில் சாகர் கவாஜ் தீவிரவாத தடுப்பு ஒத்திகை!
தஞ்சை கடலோர பகுதியில் சாகர் கவாஜ் தீவிரவாத தடுப்பு ஒத்திகை!


தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தீவிரவாதிகள் பெரும்பாலும் கடல் வழியைப் பயன்படுத்தி ஊடுருவல் செய்யலாம் என்பதால் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை ஆகியோர் கடலோர பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையிலும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு பெயரில் ஒத்திகை பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் ஆபரேசன் சாகர் கவாஜ் என்று பெயரில் தீவிரவாத தடுப்பு ஒத்திகைப்பயிற்சி நடைபெற்று வருகிறது.

இதில் தஞ்சை மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி கணேசமூர்த்தி அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் மற்றும் கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் சுபா ஆகியோர் மேற்பார்வையில் அதிராம்பட்டினம் கடலோர பகுதியில் தீவிரவாத தடுப்பு ஒத்திகைப்பயிற்சி நடைபெற்று வருகிறது.

இதில் படகு இறங்கு தளங்கள், சோதனைச்சாவடிகள் மற்றும் கிழக்குக்கடற்கரைச் சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போலீஸார் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களிடத்தில் அடையாள அட்டை மற்றும் படகுக்குரிய ஆவணங்கள் உள்ளனவா? என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர ரகசிய போலீஸாரும் ஆங்காங்கே கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயிற்சி இன்று மாலை வரை தொடர்ந்தது.

அடுத்த செய்தி