ஆப்நகரம்

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தியானம் செய்த ராகுல் காந்தி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.

Samayam Tamil 7 Sep 2022, 8:59 am
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று ஒற்றுமையின் யாத்திரை என்ற நடை பயணத்தை தொடங்குகிறார்.
Samayam Tamil rahul gandhi


கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூர 150 நாட்கள் இந்த பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இப்பயணத்தின்போது மக்களைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிற முயற்சியில் இப்பயணம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக நேற்று ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து ராகுல் காந்தி இன்று காலை சென்னையில் இருந்து சாலை வழியாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்றார். அங்கு அமைதியாக கண்களை மூடி சிறிது நேரம் தியானம் செய்தார்.
ஓபிஎஸ் தரப்பு செய்த அந்த தவறு? பாயிண்டை பிடித்த இபிஎஸ்!
இந்நிகழ்வுக்குப் பின்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து குமரி சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் ராகுல் 8ஆம் தேதி பாத யாத்திரை பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.

அடுத்த செய்தி