ஆப்நகரம்

காங்கிரசுக்கு ராகுல் தலைமையேற்க வேண்டும்: நாராயணசாமி

காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் தலைமையேற்க வேண்டும் என புதுவை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நாராயணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

TNN 20 Mar 2017, 12:09 pm
புதுவை: காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் தலைமையேற்க வேண்டும் என புதுவை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நாராயணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
Samayam Tamil rahul should accept leadership of congress party pondy cm narayanasamy
காங்கிரசுக்கு ராகுல் தலைமையேற்க வேண்டும்: நாராயணசாமி


இதுகுறித்து அவர் கூறியதாவது: உத்திர பிரதேச தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியளித்துள்ளது. எதிர் வரும் தேர்தலில் புதிய வியூகங்களை காங்கிரஸ் வகுக்க வேண்டும். ராகுல் காந்தி தலைவராக வருவதற்கு இதுவே சரியான தருணம். காங்கிரஸ் தலைமையை ராகுல் ஏற்க வேண்டும். வழிகாட்டுதல் தலைவராக சோனியாகாந்தி கட்சியை வழி நடத்த வேண்டும் என்பதே காங்கிரசாரின் விருப்பம் என்றார்.

நிறைவேற்ற முடியாதவற்றை சொல்லி வாக்குகள் கேட்டு பாஜக வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு நல்லதொரு படிப்பினையை தந்துள்ளது என்றும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி பெற்று 15 ஆண்டுகளுக்கு பின்னர், அம்மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Rahul should accept leadership of Congress party: Pondy CM Narayanasamy

அடுத்த செய்தி