ஆப்நகரம்

319 முதியவர்கள் ஒரே ஆண்டில் மரணம்: கருணை இல்லத்தில் அதிரடி சோதனை

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகேயுள்ள பாலேஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வந்த கருணை இலத்தில் இருந்து முதியோர்கள் கடத்தப்படுவதகவும் இறந்தவர்களின் எலும்புகளை விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் , மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Samayam Tamil 1 Mar 2018, 11:16 pm
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகேயுள்ள பாலேஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வந்த கருணை இலத்தில் இருந்து முதியோர்கள் கடத்தப்படுவதகவும் இறந்தவர்களின் எலும்புகளை விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் , மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
Samayam Tamil raid in old age home in dindigul and 316 death in one year
319 முதியவர்கள் ஒரே ஆண்டில் மரணம்: கருணை இல்லத்தில் அதிரடி சோதனை


திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே மெட்டூர் பகுதியில் சிறுமலை அடிவாரத்தில் செயல்பட்டு வருகிறது புனித ஜோசப் ஹாஸ்பீசஸ் என்ற கருணை இல்லம். 2006ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்தக் கருணை இல்லத்தில், பராமருப்பு இல்லாத முதியோர்கள் , சாலையோரங்களில் தங்கிருப்பவர்கள் பராமரிக்கபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் சம்பவத்தைத் தொடர்ந்து , இந்தக் கருணை இல்லம் மீதும் சந்தேகப் பார்வை ஏற்பட்டுள்ளது. பாலேஸ்வரத்தை இருந்து போலவே இங்கும் , இறந்தவர்களின் பிணங்கள் அடுக்கி வைக்க இரண்டு அடுக்கு கட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.

50 நபர்கள் மட்டுமே தங்குவதற்கு இடமுள்ள கட்டடத்தில் 231 நபர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதில் 119 பேர் பெண்கள். ஆதரவற்றவர்களான இவர்களை ஷெட்கள் அமைத்து தங்க வைத்திருக்கிறார்கள். இங்கு இறப்பவர்களை புதைப்பதோ எரிப்பதோ இல்லை. 15 அடி உயரம் கொண்ட இரட்டை அடுக்கு கட்டடத்தில் இறந்த உடல்களை வைத்துவிடுகிறார்கள். உடல் அழுகி, கீழ் அடுக்கில் விழுந்த பின்பு, எலும்புகள் மட்டுமே மேல் அடுக்கில் மிஞ்சும். அந்த எலும்புகளை விற்பனை செய்கிறார்களா என்ற ரீதியில் அதிகாரிகள் விசாரித்தனர்.

அடுத்த செய்தி