ஆப்நகரம்

பட்டாசு தொழிலாளர்கள் ரயில் மறியல்: 100க்கும் அதிகமானோர் கைது

சிவகாசியில் நலிவுற்று வரும் பட்டாசு தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ரயில் மறியல் செய்த நூற்றுக்கணக்கானவர்கள் கூண்டோடு கைது செய்யப்பட்டனர்.

Samayam Tamil 18 Jan 2018, 1:32 pm
சிவகாசியில் நலிவுற்று வரும் பட்டாசு தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ரயில் மறியல் செய்த நூற்றுக்கணக்கானவர்கள் கூண்டோடு கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil rail rako by fireworks workers in sivakasi more than 100 arrested
பட்டாசு தொழிலாளர்கள் ரயில் மறியல்: 100க்கும் அதிகமானோர் கைது


குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு தொழில் அதிகம் நடைபெறுகிறது. இப்போது இத்தொழில் நலிவுற்று வருகிறது. இத்தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் 24 நாட்களாக போராட்டம் நடத்துகின்றனர். இதன் காரணமாக பட்டாசு உற்பத்தி ஆலைகளில் வேலை பார்த்த 4 லட்சத்துக்கும் மேலான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று பட்டாசு தொழிலார்கள் ரயில் மறியல் போராட்டத்தைத் தொடங்கினர். சிவகாசி அருகே திருத்தங்கல் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட அவர்கள் போலீசாரால் கூண்டோடு கைது செய்யப்பட்டனர். இதில் சிஐடியூ தொழில் சங்கத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் கைதானார்கள்.

அடுத்த செய்தி