ஆப்நகரம்

ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்திய மீனவா்கள் 5000 போ் மீது வழக்குப்பதிவு

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவா்களை மீட்டுத்தரக்கோாி கன்னியாகுமாி மாவட்டம் குழித்துறை ரயில்நிலையத்தில் போராட்டம் நடத்திய 5 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவா் குடும்பத்தினா் மீது காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

TOI Contributor 10 Dec 2017, 5:55 pm
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவா்களை மீட்டுத்தரக்கோாி கன்னியாகுமாி மாவட்டம் குழித்துறை ரயில்நிலையத்தில் போராட்டம் நடத்திய 5 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவா் குடும்பத்தினா் மீது காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
Samayam Tamil railway police registers case against kuzhithurai protesters
ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்திய மீனவா்கள் 5000 போ் மீது வழக்குப்பதிவு


சமீபத்தில் தாக்கிய ஓகி புயலால் கன்னியாகுமாி மாவட்டம் மிகுந்த பாதிப்புக்குள்ளானது. புயலுக்கு முன்னா் கடலுக்குச் சென்ற மீனவா்கள் புயல் காரணமாக மீண்டும் கரைக்கு திரும்ப முடியவில்லை. ஆயிரத்திற்கும் அதிகமான மீனவா்களை கண்டுபிடித்து தரவேண்டும் என்று அம்மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி 5 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவா் குடும்பத்தினா் ஊா்வலமாக சென்று குழித்துறை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனா். 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டமானது மாவட்ட ஆட்சி தலைவாின் உறுதிமொழியைத் தொடா்ந்து தற்காலிகமாக முடித்துக் கொள்ளப்பட்டது.

மீனவா்களின் போராட்டத்தால் குழித்துறை ரயில் நிலையம் மூலமாக செல்லக்கூடிய ரயில்களில் 5 ரயில்களின் சேவை அன்று ஒருநாள் முழுவதும் தடை செய்யப்பட்டது. மேலும் சில ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. ஒருசில ரயில்கள் மிகுந்த கால தாமதத்திற்கு பின்னா் அந்த பாதையில் இயக்கப்பட்டன.

ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவா் குடும்பத்தினா் மீது காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். அரசின் இந்த நடவடிக்கையால் மீனவா்கள் மிகுந்த அதிா்ச்சிக்குள்ளாகியுள்ளனா்.

அடுத்த செய்தி