ஆப்நகரம்

ஒரே நாளில் நெல்லை நோக்கி படையெடுத்த 42 ஆயிரம் பேர்

பொங்கலை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் நெல்லை மார்க்கமாக சுமார் 42 பேர் பயணித்துள்ளனர் என்ற ரயில்வே தெரிவித்துள்ளது.

Samayam Tamil 14 Jan 2018, 1:32 pm
பொங்கலை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் நெல்லை மார்க்கமாக சுமார் 42 பேர் பயணித்துள்ளனர் என்ற ரயில்வே தெரிவித்துள்ளது.
Samayam Tamil railway profits from pongal special trains
ஒரே நாளில் நெல்லை நோக்கி படையெடுத்த 42 ஆயிரம் பேர்


தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் இன்று மகிழ்ச்சியாகக் கொண்டாடடப்படுகிறது. வீடுகள் தோறும் புத்தாடை உடுத்தி பொங்கலிட்டு அண்டை வீட்டாருடன் பகிர்ந்துகொண்டு கொண்டாடுகின்றனர்.

பொங்கல் திருநாளுடன் இணைந்த தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளும் பல பகுதிகளில் நடைபெறுகின்றன.

இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு சென்னையில் இருந்து நெல்லை மார்கமாக சனிக்கிழமை 26 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதில் 41,837 பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.1.87 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

இதே போல, கோவை மார்கமாக 14 ரயில்கள் இயக்கப்பட்டன. இவற்றில் 21,445 பேர் பயணித்துள்ளனர். இதன் மூலம் 1.22 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

அடுத்த செய்தி