ஆப்நகரம்

மழையால் குளுமையான சென்னை!

சென்னையில் நேற்று இரவு பெய்த மழையால் குளுமை அடைந்துள்ளது.

TNN 12 Jul 2017, 10:25 am
சென்னை : சென்னையில் நேற்று இரவு பெய்த மழையால் குளுமை அடைந்துள்ளது.
Samayam Tamil rain cools chennai showers to continue
மழையால் குளுமையான சென்னை!


சென்னையில் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை பெய்து குளுமையாக்கியுள்ளது. கோடை காலம் முடிந்தும் வெயில் வாட்டி எடுத்தநிலையில், நேற்று வெப்பச்சலனம் காரணமாக விடிய விடிய மழை பெய்தது.

வடபழனி, போரூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்தது. அதேபோல், பூந்தமல்லி,மதுரவாயல், பல்லாவரம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது.

தண்ணீர் பிரச்னையால் தவித்ததோடு சுட்டெரிக்கும் வெயிலில் புலம்பிய மக்களுக்கு ஆறுதலாக குளுமை ஏற்படுத்தியுள்ளது நேற்று பெய்த மழை.

அடுத்த செய்தி