ஆப்நகரம்

தலைநகர் உட்பட தமிழகத்தை குளிர்வித்த மழை!

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TOI Contributor 20 Jun 2017, 9:04 am
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Samayam Tamil rain in chennai and other places of tamilnadu
தலைநகர் உட்பட தமிழகத்தை குளிர்வித்த மழை!


கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. இந்நிலையில் அடுத்தவாரம் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவியது. இதனால் விவசாயமும் பொய்த்து போனது.

இந்நிலையில் இப்போது வெப்ப சலனம் காரணமாக மழை பெய்வதால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் கிண்டி, தாம்பரம், குரோம்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளது.

மேலும் தஞ்சாவூர், அரியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதே போல நாகை மாவட்டம் கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

அடுத்த செய்தி