ஆப்நகரம்

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை!

தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டு இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதால் மற்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Samayam Tamil 16 Dec 2018, 10:25 am
சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.
Samayam Tamil tn rain


சென்னைக்கு தென் கிழக்கே 690 கிலோ மீட்டர் தொலைவில்லை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக மாறி டிசம்பர் 17ம் தேதி மதியம் ஆந்திரா கடல் பகுதியில் ஓங்கோல் - காக்கிநாடாவில் கரையை கடக்கும் என கூறப்பட்டது.

இதன் காரணமாக வட தமிழகத்தில் பரவலான மழை பெய்ய கூடும். மேலும் புயல் கரையை கடக்கும் போது தமிழக கடலோர பகுதியில் 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் தரை காற்று வீச கூடும். இதனால் , சென்னையில் இன்று லேசான மழையும்,மிதமான மழை பெய்யும். அடுத்த இரண்டு தினங்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி, இன்று காலை முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. காற்றின் வேகமும் நேற்று மாலை முதல் அதிகரித்துள்ளது. காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. புயலின் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட கடலோரப் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்று இந்திய வானலை ஆய்வு மையம் கூறியுள்ளது

அடுத்த செய்தி