ஆப்நகரம்

ஜில் என ஒரு மழைத்துளி என்னை நனைக்குதே :சென்னையில் மீண்டும் மழை

சென்னையில் அடையாறு, தரமணி, திருவான்மியூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 10 Nov 2017, 12:45 pm
சென்னையில் அடையாறு, தரமணி, திருவான்மியூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
Samayam Tamil rain in chennai on morning
ஜில் என ஒரு மழைத்துளி என்னை நனைக்குதே :சென்னையில் மீண்டும் மழை


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில் சென்னையில் கடந்த ஐந்து நாட்களாக மழை ஏதும் இல்லை. இந்நிலையில் இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இந்நிலையில் சென்னையின் எழும்பூர், அடையாறு, தரமணி, திருவான்மியூர், புரசைவாக்கம், அண்ணாநகர், புழுதிவாக்கம், கந்தஞ்சாவடி, ஆதம்பாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட பலபகுதிகளில் பரவலாக இன்று காலை பெய்தது.

rain in chennai on morning

அடுத்த செய்தி