ஆப்நகரம்

தமிழகத்தில் பரவலாக மழை - 5 மாவட்ட பள்ளிகளிக்கு விடுமுறை

மழை காரணமாக தமிழகத்தின் 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 4 Oct 2018, 9:20 am
சென்னை: தமிழகத்தில் பரவலாக லேசான மற்றும் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தின் 5 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது
Samayam Tamil rain


தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இலங்கையையொட்டி வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகத்தில் லேசான மற்றும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டது.

பள்ளிகளுக்கு விடுமுறை:
இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை, திருவாரூர், கடலூர், சேலம், நாகப்பட்டினம் ஆகிய 5 தமிழக மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் புதுச்சேரியிலும் தொடர் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி