ஆப்நகரம்

மழை வரப்போகுது... வானிலை மையம் அறிவிப்பு

கன்னியாகுமரி கடல் பகுதியில் இருந்து கர்நாடகா வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Samayam Tamil 27 Jan 2019, 6:19 pm

ஹைலைட்ஸ்:

  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு
  • சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil maxresdefault
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் இரு தினங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

கன்னியாகுமரி கடல் பகுதியில் இருந்து கர்நாடகா வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. வளிமண்டல கீழ் அடுக்கில் நிலவும் இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்.

இவ்வாறு வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி