ஆப்நகரம்

தமிழகத்தில் மழை குறையும்: வானிலை மையம் தகவல்

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் விலகிச் செல்வதால், வருகிற நவ.6ஆம் தேதிக்கு மேல் தமிழகத்தில் மழை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 4 Nov 2016, 1:23 pm
சென்னை: மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் விலகிச் செல்வதால், வருகிற நவ.6ஆம் தேதிக்கு மேல் தமிழகத்தில் மழை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil rain may get reduce when depression moves from centre of bay of bengal
தமிழகத்தில் மழை குறையும்: வானிலை மையம் தகவல்


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 250 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வலுப்பெற்று திசைமாறி வடகிழக்கு திசை நோக்கி செல்லும் என கூறியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரம், காங்கேயத்தில் 7 செ.மீ., மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், தென் மற்றும் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம், மத்திய மேற்கு வங்க கடலில் இருந்து விலகி செல்லும் வேளையில், வருகிற 6ஆம் தேதிக்கு மேல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை குறைந்து காணப்படும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி