ஆப்நகரம்

​ மேற்கு மாவட்டங்களை வஞ்சித்த வடகிழக்குப்பருவமழை

சென்னை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வடகிழக்குப்பருவமழை தீவிரமாக பெய்துவரும் நிலையில் மேற்கு மாவட்டங்களில் மழையின்றி வறண்ட சூழலே நிலவுகிறது.

TOI Contributor 8 Nov 2017, 12:50 pm
சென்னை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வடகிழக்குப்பருவமழை தீவிரமாக பெய்துவரும் நிலையில் மேற்கு மாவட்டங்களில் மழையின்றி வறண்ட சூழலே நிலவுகிறது.
Samayam Tamil rain percentage in total tamilnadu
​ மேற்கு மாவட்டங்களை வஞ்சித்த வடகிழக்குப்பருவமழை


தமிழகத்தில் வடகிழக்குப்பருவ மழை கடந்த 27ம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் தென்மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் மழை பெய்த நிலையில், கடந்த 30ம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

இதேபோல், நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த கன மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன.

டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால், ஆயிரக்கணக்கான சம்பா பயிர்கள், நீரில் முழ்கின. கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், மேற்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில், இதுவரை குறிப்பிடப்படும் விதத்தில் மழை பெய்யவில்லை. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில், இயல்பை விட குறைவான அளவே மழை பெய்துள்ளது. சேலம் (2%) மற்றும் கிருஷ்ணகிரி (18%) ஆகிய இரு மாவட்டங்களில் மட்டுமே இயல்வை விட சற்று கூடுதலாக மழை பெய்துள்ளது.

இதே நிலை நீடித்தால், மேற்கு மண்டல விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படும சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “மற்ற இடங்களை போல, இந்த மாவட்டங்களிலும் வடகிழக்கு மழை பெய்திருந்தால், ஏரி, குளங்களின் நீர் மட்டம் உயர்வதுடன், நிலத்தடி நீர் மட்டமும் அதிகரித்திருக்கும். ஆனால், வழக்கமான அளவிற்கு கூட மழை பெய்யாததால், கிணற்று நீரை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால், நீர் மட்டம் சரிந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை நிறைவுபெற, இன்னும் 50 நாட்கள் உள்ளதால் உடனடியாக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், நீர்வழிப்பாதைகளை சீரமைக்க வேண்டும்,” என்று கோாிக்கை விடுத்துள்ளளனா்.

அடுத்த செய்தி