ஆப்நகரம்

தமிழ்நாட்டில் நாளை எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வெப்பச் சலனம் காரணமாக 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 2 Nov 2019, 3:08 pm
வடகிழக்கு பருவ மழை இந்த ஆண்டு பரவலாக தமிழ்நாடு முழுவதும் நல்ல மழைப்பொழிவை தந்துவருகிறது. இருப்பினும் இரண்டு நாள்களாக மழையின் அளவு குறைந்தது.
Samayam Tamil Untitled collage (9)


சென்னையின் தாகத்தை தீர்க்கும் ஏரிகளுக்கு மள மளவென நீர் வரத்து அதிகரிப்பு!!

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வைகை ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்!!

அந்தமான் அருகே நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு உருவாகும் பட்சத்தில் தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹா புயல் தென்மேற்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருப்பதால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை. மீனவர்கள் அடுத்த மூன்று நாள்களுக்கு அரபிக்கடல் பக்கம் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மழையும், பனியுமாக மாறிய நீலகிரி..! மண் சரிவால் காட்சியளிக்கும் சாலைகள்...

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருவாரூரில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, விழுப்புரம், உத்தமபாளையம் ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அடுத்த செய்தி