தமிழ்நாட்டில் அடுத்த இரு தினங்களுக்கான வானிலை முன் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
ஒரிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருவள்ளூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் வீட்டுக்கும் இபிஎஸ் வீட்டுக்கும் மாறிமாறி பறக்கும் அமைச்சர்கள்!
சென்னை, புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 33 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவலாவில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. பிறையார் எஸ்டேட்டில் 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
ஆகஸ்ட் 15, 16 தேதிகளில் தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மற்றும் வடக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 -60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல், மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், ஒடிசா, வட ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும்.
கொரோனாவுக்கு ஆள் பிடிக்கிறதா தமிழ்நாடு அரசு?
மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவா கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஒரிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருவள்ளூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் வீட்டுக்கும் இபிஎஸ் வீட்டுக்கும் மாறிமாறி பறக்கும் அமைச்சர்கள்!
சென்னை, புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 33 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவலாவில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. பிறையார் எஸ்டேட்டில் 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
ஆகஸ்ட் 15, 16 தேதிகளில் தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மற்றும் வடக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 -60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல், மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், ஒடிசா, வட ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும்.
கொரோனாவுக்கு ஆள் பிடிக்கிறதா தமிழ்நாடு அரசு?
மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவா கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.