ஆப்நகரம்

என்னது மீண்டும் மழையா? அதுவும் இப்படி - வெதர்மேன் வெளியிட்ட ஷாக் நியூஸ்!

தமிழகத்தில் மழை பெய்வதற்கு சாதகமான சூழல் இருப்பதாக வெதர்மேன் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 20 Jan 2021, 4:33 pm
தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக வெளுத்து வாங்கி வந்த வடகிழக்கு பருவமழை கடந்த 19ஆம் தேதி முடிவுக்கு வந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும் காணப்படும்.
Samayam Tamil TN Rain Update


மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் இல்லை என்று தெரிவித்தது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வடகிழக்கு பருவமழையை போன்ற மழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் என்று கூறியுள்ளார். குறிப்பாக மத்திய கடலோர தமிழகம், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தென் தமிழக மாவட்டங்களிலும், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.

வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா; எப்படி செக் பண்ணுவது?
அதிலும் நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கடலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் பரவலான மழையும், நீலகிரி மற்றும் கோவையில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அதாவது வடகிழக்கு பருவமழையில் சிறு சிறு இடைவெளிகள் என்பது வழக்கம் தான். அந்த வகையில் ஜனவரி இறுதியில் அதிகப்படியான மழை தொடங்கி பிப்ரவரி வரை பருவமழை நீடிக்கும். இதன்மூலம் ஜனவரி மாதத்தில் பெய்த பருவமழையின் அதிகபட்ச சாதனை முறியடிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

சூர்யாவுக்கு ஜோடியாகும் 'டாக்டர்' பட நடிகை!
தமிழகத்தைப் பொறுத்தவரை 1921ஆம் ஆண்டு 141.2 மில்லிமீட்டர் மழைப்பொழிவே ஜனவரி மாதத்தில் பெய்த அதிகபட்ச மழையாகும். 2021 ஜனவரி மாதத்தில் தற்போது வரை 137.7 மில்லிமீட்டர் மழை பெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி