ஆப்நகரம்

தமிழகத்தில் இங்கெல்லாம் வெளுக்கப் போகும் மழை - வானிலை ஆய்வு மையம் முக்கியத் தகவல்!

அடுத்ததாக எங்கெல்லாம் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 10 Jun 2019, 7:01 pm
தமிழகத்தில் கோடை வெயில் சற்றே தணியத் தொடங்கி உள்ளது. விரைவில் பருவமழை தொடங்குகிறது. இதற்கிடையில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
Samayam Tamil Heavy Rain


இந்நிலையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், லட்சத்தீவை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஏற்பட்டது.

கடலின் கிழக்கு மற்றும் மத்திய பகுதியில் ஏற்பட்ட தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.

மேலும் 24 மணி நேரத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாறும். எனவே மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடுத்த 3 நாட்களுக்கு அரபிக்கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி